Thursday, June 9, 2011

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சார்பில் உலகம் முழுக்க ஒரே நாளில் சர்வமத பிரார்த்தனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'மதங்களுக்கு அப்பாற்பட்ட பிரார்த்தனை' என அறிவிக்கப்பட்டுள்ள இதில் உலகம் முழுவதும் உள்ள ரஜினியின் ரசிகர்கள், காலை 10 மணி முதல் மாலை 5 வரை, தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி ரஜினி பூரண நலத்துடன் நீண்ட ஆயுள் பெற்று ரசிகர்களை வழிநடத்த இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை முதல் மாலை வரை பிரார்த்தனை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தமிழகம், இந்தியா, வெளிநாடுகள் என ரஜினியின் ரசிகர்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரார்த்தனையை மேற்கொள்கிறார்கள்.

'தலைவர் ரஜினிக்காக உலகளாவிய சர்வமத பிரார்த்தனை' என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரஜினி ரசிகர்களுக்காக இயங்கும் 'என்வழி' நண்பர்கள், ரஜினிபேன்ஸ்.காம் மற்றும் ரஜினிலைவ்.காம் ஆகியோர் முன்னெடுத்துள்ளனர். ஆனாலும் பிரார்த்தனையை நடத்தப்போவது முழுக்க முழுக்க ரசிகர்களே என்பது குறிப்பிடத்தக்கது.