Monday, July 26, 2010

மாறுவேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


பொதுவாக வி.ஐ.பி.களுக்கு தாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வர முடியாது. பொதுமக்களின் அன்புத்தொல்லையே காரணம். ஆனால் நம் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறரால் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு மாறு வேடத்தில் ,தான் விரும்பிய இடங்களுக்கு சென்று வருவார். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் நடந்த தாஜ்மஹால் பற்றிய கவியரங்கத்திற்கு தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு கண்ணாடி அணிந்து கொண்டு கடைசி வரிசையில் உட்கார்ந்து நிகழ்ச்சியை ரசித்து மகிழ்ந்தார்.அகில உலக சூப்பர் ஸ்டார்,இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்,உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அந்த அன்புத்தலைவன் நினைத்திருந்தால் எப்படிப்பட்ட ராஜமரியாதை கிடைத்திருக்கும். ஆனால் எந்த படாடோபமும் இல்லாமல் எவ்வளவு எளிமையாக கடைசி வரிசையில் அமர்ந்து பார்க்கிறார் பாருங்கள். அதனை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போது கண்டு மகிழ்ந்தேன். அந்த புகைப்படத்தையும் காட்சியையும் இணைத்துள்ளேன். பார்த்து ரசியுங்கள்.

Monday, July 12, 2010

கவிப்பேரரசு வைரமுத்து : சந்தோஷம் சந்தோஷம்


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் யூத் திரைப்படத்திற்காக எழுதிய சந்தோஷம் சந்தோஷம் என்ற பாடல் முத்து முத்தான வரிகளைக்கொண்ட அற்புதமான பாடல். மன காயத்திற்கு மருந்து தடவும் அருமையான வரிகள் கொண்டது இப்பாடல். படத்தின் நாயகன் விஜய்க்கு நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் திருமணத்தின் போது தன் காதலனுடன் சென்று விடுவாள். பிறகு தன் காதலன் கயவன் என்பதை உணர்ந்து தற்கொலைக்கு முயன்று, பின் காப்பாற்றப்பட்டு தான் ஒதுக்கிய விஜயிடமே அடைக்கலம் ஆவாள். அவள் தவறுகளை மன்னித்து அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விஜய் பாடும் பாடல் தான் இது.தவறுகள் மன்னிக்க கூடியவை தான்,தவறுகளைத் திருத்திக்கொண்டு வாழ வேண்டும் என்பதை எளிமையாக கூறுகிறது இந்த பாடல். மன வலிக்கு ஒத்தடம் கொடுத்து மன வலிமையைத் தரும் அந்த வைர வரிகள்:

'சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையில் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்.
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு... ஓஹோ ஹோ ....
வெற்றியைப்போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி திருந்தியபிறகு தான் நாகரிகம் வளர்ந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பருவக்கொடி
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத்தொட்டி இல்லை
உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பமில்லை...

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய்ப் போய்விடில்
மனிதன் ஆசையே இங்கு மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை என்றும் நாலு பேர்கள் சொல்லுவது
நம்முடைய பிழையில்லையே
துன்பம் என்ற சிப்பிக்குள் தான் இன்பம் என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்த்துளியை வைரம் செய்யும் கலையைக் கற்று கொள்
காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்'...
இந்த இனிய பாடலை தந்த கவிப்பேரரசை அன்புடன் வாழ்த்துகிறேன்.

Sunday, July 4, 2010

கவிப்பேரரசு வைரமுத்து: வெற்றி நிச்சயம்


மனதிற்கு நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வேண்டுமா... சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை படத்தில் இடம் பெறும்
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'வெற்றி நிச்சயம்' பாடலைக் கேட்டால் போதும். இந்தப்பாடல் உருவான காலகட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு மட்டுமல்ல பாலச்சந்தர் அவர்களின் கவிதாலயா நிறுவனம், இளையராஜாவை விட்டு பிரிந்து சிறிது தொய்வாக இருந்த வைரமுத்து அவர்கள், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த தேனிசைத்தென்றல் தேவா அவர்கள்,இயக்குனர் சுரேஷ்க்ருஷ்ணா அவர்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை தந்து மாபெரும் வெற்றி பெற்ற பாடல் இது. துவண்டு போய் இருப்பவர்களுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுத்து நிமிர்ந்து எழச்செய்யும் பாடல் இது . ஒவ்வொரு வரிகளையும் கவனியுங்கள், உண்மை தெரியும்.
வெற்றி நிச்சயம்- இது வேத சத்தியம் , கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம். அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் - உன்னை வெல்வேன்...
இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது - சூரியன்
தூங்கலாம்,எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுமே...
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே....

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் -தாழ்வதில்லை தன்மானம்
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்...
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்விகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே...
எனது நடையில் உனது படைகள் ஒடிபடுமே-
அடே நண்பா உண்மை சொல்வேன் சவால்
வேண்டாம். உன்னை வென்றேன்...
வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறி, கோபம், ஆவேசம், உண்மை , நம்பிக்கை, தெளிவு, இவை ஒன்று சேர உருவான இந்த பாடல் என் இதயத்தில் முதல் இடத்தை பிடித்த பாடல்.