Monday, July 26, 2010

மாறுவேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


பொதுவாக வி.ஐ.பி.களுக்கு தாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வர முடியாது. பொதுமக்களின் அன்புத்தொல்லையே காரணம். ஆனால் நம் சூப்பர் ஸ்டார் ரஜினி பிறரால் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு மாறு வேடத்தில் ,தான் விரும்பிய இடங்களுக்கு சென்று வருவார். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் நடந்த தாஜ்மஹால் பற்றிய கவியரங்கத்திற்கு தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு கண்ணாடி அணிந்து கொண்டு கடைசி வரிசையில் உட்கார்ந்து நிகழ்ச்சியை ரசித்து மகிழ்ந்தார்.அகில உலக சூப்பர் ஸ்டார்,இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்,உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அந்த அன்புத்தலைவன் நினைத்திருந்தால் எப்படிப்பட்ட ராஜமரியாதை கிடைத்திருக்கும். ஆனால் எந்த படாடோபமும் இல்லாமல் எவ்வளவு எளிமையாக கடைசி வரிசையில் அமர்ந்து பார்க்கிறார் பாருங்கள். அதனை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போது கண்டு மகிழ்ந்தேன். அந்த புகைப்படத்தையும் காட்சியையும் இணைத்துள்ளேன். பார்த்து ரசியுங்கள்.

No comments:

Post a Comment