இதயம் நிறைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதற்கு முன்னால் உலகில் பல நட்சத்திரங்கள் வந்திருக்கலாம்,ஜொலித்திருக்கலாம், பிறகு பொலிவு இழந்திருக்கலாம். ஆனால் எந்த திரையுலகத்திலும் முப்பத்திரண்டு ஆண்டுகள் உச்ச நட்சத்திரமாக ரஜினியை தவிர எவரும் ஜொலித்ததில்லை. இதற்கு காரணம் கடும் உழைப்பு , அவரது வித்தியாசமான ஸ்டைல், யாருக்கும் தீங்கிழைக்காத நல்ல மனம், வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் வாரி வழங்கும் விளம்பரம் இல்லா கொடை மனம், பழைய வாழ்க்கையை மறக்காத நற்குணம் மற்றும் எந்த நிலையிலும் அவரை விட்டு பிரியாத அன்பு ரசிகர்களும் தான். அந்த அன்பு தலைவனை வணங்குகிறேன் . எம்ஜிஆர் சிவாஜி காலங்களில் போட்டி அவ்வளவாக இல்லை .செக்க்கசிவந்த நிறம் ,கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் சிபாரிசு இவையெல்லாம் சேர்ந்து தான் நடிக்கவே வர முடியும். எம்ஜிஆர் காங்கிரஸில் இணைந்து பிறகு தி.மு.க வில் இணைந்து கழக தொண்டர்களின் பின்னணியில் தானும் வளர்ந்து தி.மு.க வையும் வளர்த்தார். சிவாஜியை தவிர வேறு போட்டியாளர்கள் கிடையாது. ஜெமினி, ஜெய்ஷங்கர் போன்றவர்கள் குறைந்த பட்ஜெட் நடிகர்கள்.ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளரவும் விட மாட்டார். ஆனால் ரஜினி நடித்த காலகட்டங்களில் பல நடிகர்களை வளர விட்டு தானும் வளர்ந்தார்.கமல், சிவகுமார், ஜெய்ஷங்கர் இவர்கள் ஒரு காலகட்டம் , டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ், தியாகராஜன், ஆனந்த்பாபு ,இவர்கள் ஒரு காலகட்டம்,பிரபு, ராமராஜன், மோகன் இவர்கள் ஒரு கால கட்டம் , பிறகு முரளி ,கார்த்திக், சுரேஷ் இவர்கள் ஒரு காலகட்டம், அடுத்து ராஜ்கிரண் ,பிரபுதேவா, அர்ஜுன், இவர்கள் ஒரு காலகட்டம், பிறகு அஜித் ,விஜய்,பார்த்திபன் , பிரசாந்த் என்று ஒரு காலகட்டம், பிறகு சிம்பு,தனுஷ், சூர்யா என்ற ஒரு காலகட்டம்,அதன் பிறகு கார்த்தி, பரத்,ஆர்யா இப்படி பல இளைய தலைமுறை நடிகர்கள் மட்டுமல்ல ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பி. வாசு ,ஷங்கர், பாலா இப்படி இயக்குனர்களின் கால கட்டங்களிலும் உச்ச நட்சத்திரமாக தொடர்ந்து நிற்கிறார்.யாருடைய வளர்ச்சியையும் விரும்பி வாழ்த்துவார். அதை தடுக்க முற்பட்டதே இல்லை. ஒரு கருப்பான உருவம் கதாநாயகனாக முடியும் என்று உலக சினிமாவில் நிரூபித்த முதல் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.உலகத்திலேயே திரைப்படபாடல்கள் அடங்கிய சி.டி. வெளிவரும் போதுஅமர்க்களப்படுவது சூப்பர் ஸ்டார் பட சி.டி. வெளியாகும் போது தான். இப்போது கூட சென்னை ரிச்சி தெருவுக்கு சி.டி.வெளியாகும் தினம் போனால்அதை பார்த்து மகிழலாம். தமிழ் நாட்டின் திருவிழா தலைவரின் பட வெளியிட்டு நாள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த வித பின்னணியும் இல்லாமல் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் அன்புத்தலைவர் வாழ்க வாழ்க.
No comments:
Post a Comment